தமிழ்நாடு (Tamil Nadu)

கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் சரிவு

Published On 2024-09-01 06:26 GMT   |   Update On 2024-09-01 06:26 GMT
  • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உள்ளது.
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை மூலம் மதுரை ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

65 அடியை நெருங்கிய நிலையில் தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டதால் முழு கொள்ளளவை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து விட்டது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் 63.58 அடியாக குறைந்துள்ளது.

அணைக்கு 364 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4323 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உள்ளது. 948 கன அடி நீர் வருகிற நிலையில் 406 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4849 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 46 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.6, தேக்கடி 5, கூடலூர் 1.8, சண்முகாநதி 2, உத்தமபாளையம் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News