தமிழ்நாடு

இது புதுசா இருக்கே... மதுபானக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை

Published On 2024-08-12 14:18 GMT   |   Update On 2024-08-12 14:18 GMT
  • தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.
  • 20 கி.மீ சென்று மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுபான கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி பொதுமக்கள் போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் தங்கள் பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தரம்புரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News