ரூ.4000 கோடியில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
வில்லிவாக்கம் பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான மகளிர் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
இதையடுத்து 110 விதியின் கீழ் அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் தொடர்ந்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.
* ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
* கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி சாலை மேம்பாட்டை தமிழக அரசு செய்து வருகிறது.
* பேருந்து செல்லும் சாலை, குக்கிராமங்களை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த அரசு தொடர்ந்து முன்னிலை அளிக்கிறது.
* தரமான சாலைகள் கிராப்புற மக்களின் வருமானத்தை உயர்த்துவதாக அமைகிறது.
* கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி, ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
* 3 ஆண்டில் 16,000 கி.மீ., நீளமுள்ள சாலை, மேம்பால பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது
* 2 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் ரூ.4000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.