செய்திகள் (Tamil News)

குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலி

Published On 2018-06-15 06:47 GMT   |   Update On 2018-06-15 07:03 GMT
இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார். #Germanprince
லண்டன்:

ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ். 41 வயதான இவர் இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து 2015-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.

அப்போது வேகமாக சென்ற குதிரை திடீரென்று துள்ளிக் குதித்தது. இதில் இளவரசர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த தகவலை ஜெர்மன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது. #Germanprince
Tags:    

Similar News