செய்திகள்
லண்டன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது
இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். #CharingCrossStation
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று காலை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கமான ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் எனவும் கூறினர்.