செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்ற இந்திய - அமெரிக்கப் பெண்

Published On 2018-10-19 10:54 GMT   |   Update On 2018-10-19 10:54 GMT
அமெரிக்காவில் சட்டமீறலான ஆள் கடத்தலை தடுத்து நிறுத்த சேவையாற்றிய இந்திய - அமெரிக்க பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்றார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward #MinalPatelDavis
வாஷிங்டன்:

அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் கடத்தலை தடுக்க அந்நகர மேயர் தலைமையில் தனி குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணான  மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். ஆள் கடத்தலை தடுப்பது தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்தரங்கங்களில் உரையாற்றியுள்ள  மினால் பட்டேல் டேவிஸ், தனது துறையில் ஆற்றிய சேவைக்காக அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ அவருக்கு இந்த விருதினை அளித்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நான் ஹுஸ்டன் நகர மேயர் அலுவலத்துக்கு செல்வேன். பெருமைக்குரிய இந்த வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று முன்னர் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததுகூட இல்லை என விருது வழங்கும் விழாவில் பேசிய மினால் பட்டேல் டேவிஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். #IndianAmericanawarded #WhiteHouse #humantrafficking #USPresidentialaward  #MinalPatelDavis
Tags:    

Similar News