உலகம் (World)

ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளையா?... விசாரணைக்கு உள்ளான கேரள நபர்

Published On 2024-09-21 07:31 GMT   |   Update On 2024-09-21 07:31 GMT
  • தைவான் வழங்கிய பேஜரில் 3 கிராம் வெடிபொருளை மொசாட் சேர்த்ததாக இஸ்புல்லா குற்றச்சாட்டு.
  • ஹிஸ்புல்லாவுக்கு பல்பேரியா நிறுவனம் தயாரித்த பேஜர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இஸ்ரேலின் வடக்குப்பதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடியமர்த்தப்படுவதுதான் போரின் புதிய இலக்கு என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதனால் லெபானான் நாட்டின் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

இஸ்ரேல் அறிவிப்புக்கு அடுத்த நாள் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பேஜர்களை தைவானை அடிப்படையாக கொண்ட நிறுவனம் தயாரித்ததாகவும், அந்த பேஜர்களை மாற்றம் செய்து அதில் 3 கிராம் வெடிப்பொருட்களை மொசட் இணைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பல்கேரிய விசாரணை அமைப்பு DANS தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையில் நோர்ட்டோ குளோபல் லிமிடெட் நிறுவனம் ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக சந்தேகம் எழுந்தது. இந்த நிறுவனம் குறித்து பல்கேரியா விசாரணை அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டது. அப்போது 2022-ல் சோபியாவில் அந்த நிறுவனம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர் நார்வே நாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

ரின்சன் ஜோஸ் கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறியவர். நார்வே குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.

பின்னர், லெபனான் பயன்படுத்திய பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல. பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்படவில்லை. இறக்குமதியும் செய்யப்படவில்லை என விசாரணை முடிவில் DANS தெரிவித்துள்ளது.

Similar News