உலகம் (World)

உக்ரைன் தலைநகர் கீவ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Published On 2024-08-23 05:49 GMT   |   Update On 2024-08-23 05:49 GMT
  • போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • 1991-க்குப் பிறகு உக்ரைன் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக போலந்து சென்றார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு ரெயில் மூலமாக உக்ரைன் புறப்பட்டார். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11 மணியளவில் உக்ரைன தலைநகர் கீவ் நகர் சென்றடைந்தார்.

1991-ல் உக்ரைன சோவியத் யூனியனில் இருந்து பிரிந்தது. அதன்பின் இந்திய பிரதமர் உக்ரைன் செல்வது இதுவே முதன்முறையாகும்.

Tags:    

Similar News