உலகம் (World)

ரஷியாவுடன் இணைந்த வடகொரிய ராணுவம்: அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

Published On 2024-10-25 23:59 GMT   |   Update On 2024-10-25 23:59 GMT
  • உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
  • ரஷியாவிற்கு உதவ 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவுசெய்துள்ளது.

கீவ்:

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷியா குற்றம்சாட்டியது.

இதற்கிடையே, உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து அந்நாட்டுக்கு வடகொரியா தங்களின் ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

உக்ரைனுடன் போரிட்டு ரஷியாவிற்கு உதவ 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3,000 வடகொரிய வீரர்கள் கடந்த சில நாளுக்கு முன் ரஷியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தென்கொரிய எம்.பி. எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், வரும் நாட்களில் வடகொரிய ராணுவமும் ரஷியாவுடன் இணைந்து கொள்ளும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் இடையே போர் மண்டலங்களில் வடகொரிய ராணுவத்தை ரஷியா பயன்படுத்தும் என உக்ரைன் உளவுத்துறை கணித்துள்ளது.

இந்த வரிசைப்படுத்தல் ரஷியாவின் வெளிப்படையான விரிவாக்க நடவடிக்கை ஆகும். வடகொரிய வீரர்கள் எங்கு அனுப்பப்படலாம் என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் தெரியவில்லை.

வடகொரியப் பிரிவுகள் சண்டையில் சேருவது கிட்டத்தட்ட 3 ஆண்டு கால போரைத் தூண்டிவிட்டு இந்தோ-பசிபிக் பிராந்தியம் வரை புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என மேற்கத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News