செய்திகள் (Tamil News)

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

Published On 2019-06-17 09:11 GMT   |   Update On 2019-06-17 09:11 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது. மைதானத்துக்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் கோலி நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறினார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக இருந்தது தவறாக கணித்து கோலி வெளியேறினார்.

கோலியின் இந்த செயலை பார்த்து அவருக்கு அமைதிக்கான நோபால் பரிசு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தெரிவித்து உள்ளனர்.

Similar News