செய்திகள்
திருமலையில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் 2 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அத்துடன் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி லட்சுமிகாந்தம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்குள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அத்துடன் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி லட்சுமிகாந்தம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.