செய்திகள்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்

Published On 2019-05-17 09:31 GMT   |   Update On 2019-05-17 09:31 GMT
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
புதுவை அபிஷேகப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்றுமுதல் நாள்தோறும் காலையில் பல்லக்கில் சாமி வீதி புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடந்து வந்தது. விழாவின் 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது.

அதிகாலை 5 மணிக்கு நடந்த தேரோட்டத்தில் தமிழகம், புதுவை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து “கோவிந்தா, கோவிந்தா” என்ற கோ‌ஷத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் 4 மாட வீதிகளின் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இன்று இரவு 6.30 மணிக்கு தேரடி உற்சவமும், 10 மணிக்கு தீர்த்தவாரி அவரோ ஹணமும் நடக்கிறது. நாளை காலை மட்டையடி உற்சவமும், மாலையில் திரு மஞ்சனமும், இரவு சாமி வீதியுலாவும் நடக்கிறது. 19-ந் தேதி புஷ்பயாகமும், 20-ந்தேதி ஊஞ்சல் உற்ச வத்துடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News