வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனத்தில் அனுமதி

Published On 2022-04-08 05:41 GMT   |   Update On 2022-04-08 07:45 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய இந்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 1-ந் தேதியே இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமும் 1000 பேர் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தரிசன டிக்கெட் பெற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நாளை (சனிக்கிழமை) முதல் தரிசனம் செய்யலாம். தினமும் காலை 10 மணி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்.

வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்...சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி: 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

Similar News