புதுச்சேரி
குடி போதையில் ரகளை செய்த வாலிபர் கைது
- பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
- வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை போலீசார் ஜெயமூர்த்தி ராஜாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பொது மக்களை அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தார்.
அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முதலியார் பேட்டை கருமார வீதியை சேர்ந்த அசோக் குமார் வயது 22 என்பது தெரியவந்தது.