புதுச்சேரி
சாலையில் நிறுத்தப்பட்ட பைக்கை திருடும் டிப்டாப் ஆசாமி
- சி.சி.டி.வி.யில் பதிவான காட்சியை வெளியிட்டு போலீசார் தேடுதல்
- கடற்கரை பகுதியில் யமாஹா பைக்கை டிப் டாப் நபர் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சிக்கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக யமாஹா பைக்கை குறிவைத்து திருடுவது அதிகரித்தது.
ஆனால், திருடர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் கடற்கரை பகுதியில் யமாஹா பைக்கை டிப் டாப் நபர் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சி சிக்கியுள்ளது.
இதில் புதுவை கடற்கரையை யொட்டிய சாலையில் டிப் டாப் நபர் ஒருவர் கூலாக நடந்து சென்றுஅங்கு நிறுத்தபட்டிருந்த யமாஹா பைக்கை திருடி செல்கிறார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த காட்சியை போலீசார் வெளியிட்டு, டிப் டாப் நபரை ஒதியஞ்சாலை போலீசார் தேடி வருகின்றனர்.