புதுச்சேரி

வாய்க்கால் உடைக்கப்பட்டு குப்பை குளங்கள் குவிந்து கிடக்கும் காட்சி.

கிடப்பில் போடப்பட்ட சுதேசி மில் வாய்க்கால் பணி

Published On 2023-11-27 09:05 GMT   |   Update On 2023-11-27 09:05 GMT
  • சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
  • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

புதுச்சேரி:

புதுவை மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலில் முல்லை நகர், பெரியார் நகர், ஜே.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் வடிந்து செல்லும். மூடப்பட்ட இந்த வாய்க்காலின் மீது சுதேசி மில் சுவரை ஒட்டி கடைகள் அமைத்திருந்தனர்.

இதனால் ஆண்டுக் கணக்கில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாலும் இருந்தது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

வாய்க்காலை மூடியிருந்த சிலாப்புகள் கடலூர் சாலை சந்திப்பிலிருந்து உருளை யன்பேட்டை போலீஸ் நிலையம் வரை அகற்றப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலில் கட்டுமா னப்பணிக்கு கான்கிரீட் அமைக்க கம்பிகள் கட்டும் பணி நடந்து வந்தது. திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டது. மாதக்க ணக்காகியும் இந்த பணி மீண்டும் தொடங்கவில்லை.

அங்கிருந்து இரும்பு கம்பிகளை இரவு நேரங்களில் பலர் திருடி செல்கின்றனர்.

அதேநேரத்தில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அதில் குப்பை, கூளங்கள் சரிந்து தண்ணீர் தேங்க தொடங்கி யது. மழை நேரத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி உட்புற சாலைகளில் கழிவுநீர் செல்ல தொடங்கி யது. சமீபகாலமாக டெங்கு, மலேரியா, வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. பிரதான சாலையில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த சாலையில் நாள்மு ழுவதும் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது. அதோடு அங்கு கடை வைத்தி ருந்தவர்கள் நீண்டகாலமாக காத்திருந்தும் பணிகள் முடியாததால் அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் வேதனை அடைந்து வருகின்ற னர். வாய்க்கால் கட்ட பணி க்காக அமைக்கப்பட்ட கம்பி கள் துருப்பிடித்து வருகிறது. திறந்து கிடக்கும் கால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு ள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News