புதுச்சேரி

கோப்பு படம்.

அண்ணாதிடல் மேம்பாட்டு பணிகளைவிரைவில் கட்டி முடிக்க வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-16 08:13 GMT   |   Update On 2023-03-16 08:13 GMT
  • புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.
  • தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்யநேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

புதுவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள கடைகளை புதிதாக கட்டும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடைபெற்று வந்தது.

காலக்கெடு முடிந்து ஓராண்டு ஆகியும் இதுவரை பணிகள் முடிவடையாமல் உள்ளது. தற்போது மைதானம் சுற்றி இரும்பு தகடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா திடல் பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மேம்படுத்தும் பணிகளையும், அண்ணா சாலை, லப்போர்த் வீதி , சின்ன சுப்பிராயபிள்ளை வீதி போன்ற வீதிகளில் உள்ள கடைகள் கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News