புதுச்சேரி

கோப்பு படம்.

மோட்டார் சைக்கிள் செல்ல வழிவிடாத பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்

Published On 2023-11-10 08:57 GMT   |   Update On 2023-11-10 08:57 GMT
  • 2 வாலிபர்கள் கைது
  • 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது.

புதுச்சேரி:

புதுவை திருக்கனூரில் தனியார் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நேற்று மாலை வீடு திரும்பும் போது அனைவரும் ஒன்றாக கைகோர்த்தபடி சென்றனர்.

அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிடாமல் மாணவர்கள் சுவராஸ்யமாக பேசிக்கொண்டு சென்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். இதில் 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை நாகராஜன் திருக்கனூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் களான திருக்கனூரை சேர்ந்த ரியாஸ்(24), திருமால்(24) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருக்கனூரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News