புதுச்சேரி

மருந்தாளுநர் தினத்தையொட்டி ஜிப்மரில் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

ஜிப்மரில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-28 08:49 GMT   |   Update On 2023-09-28 08:49 GMT
  • புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.
  • மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருந்தக துறையின் சார்பில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டின் கருப்பொருளான சுகதார அமைப்பை வலுப்படுத்தும் மருந்தாளுநர்கள் என்ற பதாகைகள் ஏந்தி பேரணி, மரக்கன்று நடுதல், மருந்துகள் பயன்பாடு குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் தலைமை வகித்தார். மருந்தகத்துறை அதிகாரி ஜெயந்தி வரவேற்றார்.

ஜிப்மர் பொறுப்பு இயக்குனர் அப்துல்ஹமீது, மருந்தியல்துறை முதுநிலை பேராசிரியர் ரவீந்திரன், உதவி பொறுப்பு அதிகாரி கேசவன், இணை பேராசிரியர் மிருணாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் வெங்கடேசுவரன் அறிவியல் உரையாற்றினார்.

தொடர்ந்து கருத்தரங்கம், 30 ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் மருந்தாளு நர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜிப்மர் மருந்தாளுநர்கள் சங்க செயலாளர் சம்பத், தலைவர் ராஜகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News