புதுச்சேரி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேத்தை காணொளி மூலம் காண ஏற்பாடு

Published On 2024-01-11 08:17 GMT   |   Update On 2024-01-11 08:17 GMT
  • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
  • புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வருகிற 14-ந் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும்.

கோவில் உட்புறம், பிரகாரம், சுற்றுப்புறங்கள், சுவர்கள், துாண்கள் மற்றும் சிலைகளை உரிய வகையில் தூய்மைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தூய்மை செய்யப்பட்ட கோவில் பிரகாரங்கள், சாமி சிலைகளின் புகைப்படங்களை 'வாட்ஸ் ஆப்' மூலம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 22-ந்தேதி நடக்க உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை, பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோவில்களில், அன்று பகல் 12.00 மணி முதல் பகல் 2.30 மணி வரை உச்சி கால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News