புதுச்சேரி

ரவுடி சுகன்

ரவுடி ஊருக்குள் நுழைய தடை

Published On 2023-11-25 07:59 GMT   |   Update On 2023-11-25 07:59 GMT
  • வெடி குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
  • வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் .

புதுச்சேரி:

புதுவை பெரிய காலாப்பட்டு சுனாமி குடியி ருப்பைச் சேர்ந்த சுகன் என்கிற பிரதீப். இவர் மீது கொலை கொள்ளை வழிப்பறி வெடி குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சுகன் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் படாகம் பகுதி யில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார் .

சிறையிலிருந்து வெளியே வந்த சுகன் சமீபத்தில் காலப்பட்டுக்கு வந்தார். இங்கு சுகன் ரவுடிக ளுடன் சேர்ந்து பல்வேறு அசம்பா வித சம்பவங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சுகனை காலாப்பட்டு போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைய தடை விதித்து சப்- இன்ஸ்பெக்டர் குமார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் சுகனுக்கு ஊருக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News