புதுச்சேரி

கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி தி.மு.க. கையெழுத்து இயக்கம்

Published On 2023-11-17 08:37 GMT   |   Update On 2023-11-17 08:37 GMT
  • தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
  • புதுவையில் பெறப்படும் கையெழுத்துகள் தமிழக தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி புதுவை மாநில தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகள் இணைந்து ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கினர்.

 தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். எதிர்கட்சித் தலைவர் சிவா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாநில துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ, மாநில துணை அமைப்பாளர் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், தொகுதி செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதுவை பிராந்தியத்தில் 234 தொகுதியிலும் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. புதுவையில் பெறப்படும் கையெழுத்துகள் தமிழக தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News