புதுச்சேரி

காலாப்பட்டு தொகுதியில் வாய்கால் அமைக்கும் பணியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வாய்கால் அமைக்கும் பணி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-28 09:22 GMT   |   Update On 2022-07-28 09:22 GMT
  • காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
  • இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதி, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள எல் வடிவ வாயக்கால் சுமார் ரூ.16 லட்சம், இடையஞ் சாவடி ரோடு, குறுக்கு தெருக்களுக்கு யூ வடிவ வாய்க்கால் அமைக்க ரூ.42 லட்சம், நாகம்மன் நகர் முழுவதும் ரூ.29 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், ஊர்மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News