புதுச்சேரி

முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கிய காட்சி.

முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை

Published On 2023-11-28 06:50 GMT   |   Update On 2023-11-28 06:50 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
  • ஊக்குவிப்பு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை முப்படை நலத்துறை மூலம் முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசு களுக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சட்ட சபையில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் நமச்சிவாயம் 2022-23-ம் ஆண்டில் 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற விக்னேஸ்வரன், பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற கீர்த்தனா, 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பெற்ற சஸ்மிதாஸ்ரீ, பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற ஸ்ரீராம், மருத்துவ படிப்பில் தங்கபதக்கம் பெற்ற விஜயசங்கர், கிக்பாக்சிங்கில் தங்கம் வென்ற மோகன சந்துரு உட்பட தகுதியான 13 பேருக்கு ஊக்குவிப்பு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் முப்படை நலத்துறையின் செயலர் பத்மாஜெஸ்வால், இயக்குனர் சந்திரகுமரன், அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News