புதுச்சேரி
கோப்பு படம்.

மாணவர் தற்கொலைக்கு நண்பர்களே காரணம் - தந்தை போலீசில் புகார்

Published On 2023-11-21 08:23 GMT   |   Update On 2023-11-21 08:23 GMT
  • பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
  • முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

புதுச்சேரி,

வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா. இவர் வில்லியனூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் முகமது நவாஸ் (வயது18). இவர் கோபாலன் கடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை தனது தங்கையை அழைத்துக் கொண்டு அங்குள்ள பள்ளியில் விட்டு விட்டு முகமது நவாஸ் கல்லூரிக்கு சென்றார்.

ஜான் பாஷா தனது மனைவியுடன் விழுப்பு ரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றார். பின்னர் ஜான் பாஷா மாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் மின் விசிறியில் துப்பட்டாவால் முகமது நவாஸ் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய மகனை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகமது நவாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜான் பாஷா வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் தன்னுடைய மகன் கல்லூரிக்கு சென்று வரும் நிலையில் அவரிடம் அவரது நண்பர்கள் யாரோ பிரச்சினை செய்ததால் மனக்கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர் முகமது நவாஸ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News