புதுச்சேரி

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள்

Published On 2023-10-31 08:50 GMT   |   Update On 2023-10-31 08:50 GMT
  • அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.
  • காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சி அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும், தொகுதி காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவரும் முன்னாள் அரசு கொறடா வுமான அனந்தராமன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அன்புமணி ஆகியோர் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் கங்கேயன், மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பொன்னி, தேங்காய்திட்டு முருகன், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News