புதுச்சேரி
தகவல் தொழில்நுட்பத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு
- அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆலோசனை
- அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் தகவல் தொழில்நுட்ப உட்கட்ட மைப்பை மேம்படுத்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், உயர்கல்வித்துறை செயலர் ருத்ரகவுடு, தேசிய தகவல் தொழில்நுட்ப துறை ராஜசேகர், குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், தனிஷ்குமார், நாகராஜன், சரவணன், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் சேவை திட்டங்களை இணையதளம் மூலம் வழங்குவது, அரசு துறைகளில் உட்கட்ட மைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.