புதுச்சேரி

 அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.

ஊசுடு தொகுதியில் பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, தவில்

Published On 2023-07-23 06:10 GMT   |   Update On 2023-07-23 06:10 GMT
  • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

ஊசுடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பத்துக்கண்ணு ஊசுடு எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 15 இஸ்திரிப்பட்டி, 10 தவில், 3 நாதஸ்வரம், மற்றும் முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலியுடன் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், ஆதிதிராவிடர் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள், கமிட்டி நிர்வாகிகள், ஓபிசி அணி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News