புதுச்சேரி
பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
- கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
- மாணவ- மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகம் நடத்திய 29-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கிருமாம்பாக்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
மேலும் 9 மாணவ- மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 2019-20-ம் ஆண்டு கல்வி ஆண்டில் இளநிலை மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த சுனந்தா மற்றும் முதுநிலை எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் துறையைச் சேர்ந்த சுரேகா சிலேஸ் இருவரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.
இவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகோபாலன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கல்லூரி முதல்வர் விஜய் கிருஷ்ண ரபாகா, சாதனை படைத்த மாணவிகளை, பெற்றோர்கள் முன்னிலையில் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகம் துணைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.