புதுச்சேரி
கோண்டூர் முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
- முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தை அடுத்த தமிழக பகுதியான கோண்டூர் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், பால முருகன், முத்தாலம்மன், அய்யனா ரப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இன்று (வியாழக்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, நாடி சந்தானம் 9 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 9.50 மணிக்கு செல்வ விநாயகர், பரிவாரங்களுடன் முத்தாலம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது.