புதுச்சேரி

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆயுர்வேத தின விழா நடந்த போது எடுத்த படம்.

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 8-வது தேசிய ஆயுர்வேத தின விழா

Published On 2023-11-13 04:46 GMT   |   Update On 2023-11-13 04:46 GMT
  • வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார்.
  • தோட்டக்கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார்.

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில், 8-வது தேசிய ஆயுர்வேத தின விழா கொண்டாடப்பட்டது.

கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார். கல்லுாரி பதிவாளர் அறிவழகர் சிறப்புரை

யாற்றினார். மண்ணாடிப்பட்டு சமுதாய மையம் மருத்துவ அலுவலர் ஜாய் இம்மானுவேல், டாக்டர் தீப்தி மரியா ஆகியோர் விரிக்ஷா ஆயுர் வேதம் என்ற தலைப்பில் முதலாமாண்டு வேளாண் மாணவ-மாணவிகளுடன் கலந்துரை யாடினர்.

நிகழ்ச்சியை தோட்டக் கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்' நிஸ்மல் அஸ்வின் நன்றி கூறினார்.

Tags:    

Similar News