புதுச்சேரி

குரங்குகள்  வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்திய காட்சி.

வாணரப்பேட்டையில் குரங்குகள் அட்டகாசம்

Published On 2023-11-29 09:36 GMT   |   Update On 2023-11-29 09:36 GMT
  • குரங்கு கூட்டம் சுற்றி வருகிறது.
  • பழங்கள், உணவுப்பொருட்களை எடுத்துச்சென்றுள்ளது.

புதுச்சேரி:

புதுவை நகர பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஒரு குரங்கு கூட்டம் சுற்றி வருகிறது.இது அங்குள்ள மரங்களில் உள்ள பழங்களை சாப்பிட்டுவிட்டு சுற்றிவரும்.

இந்த குரங்குகள் கடந்த 10 நாட்களாக வாணரப்பேட்டை பகுதிக்குள் நுழைந்தது. இந்த குரங்குகள் அலைன்வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கிச்செல்கிறது. இன்று காலையிலும் வீடுகளுக்குள் புகுந்து பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பழங்கள், உணவுப்பொருட்களை எடுத்துச்சென்றுள்ளது.

இந்த குரங்குகள் 3 அடிஉயரத்தில் இருப்பதால் பொதுமக்கள் அதன் அருகில் செல்லவே அஞ்சுகின்றனர். சிலஇடங்களில் குரங்ககுள் உணவுப்பொருட்களை எடுப்பதோடு, வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்துகிறது.

இதனால் இந்த குரங்குகளை பிடித்து வேறு இடத்துக்கு அனுப்ப வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News