என் மண், என் நாடு முகாம் ஒற்றுமை உணர்வை மேலும் பலப்படுத்தும்
- வெங்கடேசன் எம்.எல்.ஏ. பெருமிதம்
- என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.
புதுச்சேரி:
பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மண்ணுக்கு வணக்கம் மாவீரர்களுக்கு வணக்கம் என்ற கருத்தின் அடிப்படை யில், என் மண் என் நாடு என்ற அற்புதமான ஒரு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஒரு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்துள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இயக்கமானது தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் என்ன வென்றால் தேசத்திற்காக போர் செய்து உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் இருக்கின்ற மண்களை சேகரித்து சுமார் 7,500 கலசங்களில் அவற்றை பராமரித்து அதனுடன் மரச் செடிகள் வைத்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு அற்புதமான கோரிக்கையும் பிரதமர் மோடியால் நாட்டு மக்களுக்கு வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நாட்டு மக்கள் அவரவர் பகுதிகளில் சுமார் 7,500 கலசங்களில் மண்களை சேகரித்து மரச்செடிகள் உடன் அவற்றை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
அவற்றை ஒருங்கிணைத்து தேசிய போர் நினைவு சின்னம் அருகே அமுத பூங்கா அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் என் மண் என் நாடு என்ற இயக்கத்தின் மூலம் அனைத்து தொகுதிகளிலும் அனைத்து பகுதிக ளிலும் பொது மக்களும்
பா.ஜனதாவுடன் இணைந்து மண்களை சேகரித்து கலசங்கள் மரச்செடிகள் கொண்டு டெல்லிக்கு அனுப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
முக்கியமாக என் மண் என் நாடு முகாம் ஆனது நமது ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான உணர்வை மேலும் பலப் படுத்த உள்ளதாகவும், நாடு முழுவதும் பெறப்பட்ட மண்ணிலிருந்து உருவாக் கப்படும். இந்த அம்ரித் வாடிகா கீழ் நாம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும், அவை ஒரு இந்தியா சிறந்த இந்தியாவின் தொலை நோக்குப் பார்வையை உணர செய்யும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.