புதுச்சேரி

 அன்னுசாமி பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம் நடைபெற்ற காட்சி.

அன்னுசாமி பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம்

Published On 2023-11-01 07:07 GMT   |   Update On 2023-11-01 07:07 GMT
  • சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
  • ஒற்றுமை தீபத்தை முதல் மாணவர் ஏந்தி ஓட பள்ளியின் அனைத்து மாணவர்களும் பள்ளியைச் சுற்றி வலம் வந்தனர்.

புதுச்சேரி:

பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா கொண்டாட ப்பட்டது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை " புதுச்சேரி அரசின் வழிகாட்டலின்படி ஒற்றுமைக்கான ஓட்டம்" என்ற நிகழ்வை ஒற்றுமை தீபத்தோடு மாணவர்கள் மேற்கொண்டனர். ஒற்றுமை தீபத்தை முதல் மாணவர் ஏந்தி ஓட பள்ளியின் அனைத்து மாணவர்களும் பள்ளியைச் சுற்றி வலம் வந்தனர். சுமார் ஆயிரம் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பள்ளியின் தலைவர் இருதயமேரி ஜோதி ஏற்றி ஓட்டத்தை தொடங்கிவைத்தார் , தாளாளர் ராஜராஜன் சிறப்புரையாற்றினார். முதல்வர் நீலம் அருள்செல்வி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News