புதுச்சேரி
ரூ.17 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
- அமைச்சர் சாய். ஜெய். சரவணன் குமார் இயக்கி வைத்தார்
- ரூ. 17 லட்சத்தில் புதிதாக அமைக்க பட்ட டிரான்ஸ்பார்மரை அமைச்சர் சாய்.ஜெய் .சரவணன் குமார் இயக்கி வைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட கல்மேடுபேட் பகுதியில் அவ்வபோது மின் பற்றாக்குறை ஏற்படுவதால் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் தீவிர முயற்சியால் அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதன்படி ரூ. 17 லட்சத்தில் புதிதாக அமைக்க பட்ட டிரான்ஸ்பார்மரை அமைச்சர் சாய்.ஜெய் .சரவணன் குமார் இயக்கி வைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர், ராமநாதன், உதவி பொறியாளர் தணிகாசலம், இளநிலை பொறியாளர்கள் முத்துக்குமார், சிவராஜ், வெங்கடேசன், ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய் தியாகராஜன், கல்மேடு பேட் கட்சி நிர்வாகிகள் செல்வாநாதன், பிரகாஷ்,கார்த்தி, ராஜேஷ், பிரதாப், பழனிவேல், மின் துறை பொறுப்பாளர் ஆனந்த் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.