புதுச்சேரி
தமிழ் வளர்ச்சி சிறக அலுவலகம் திறப்பு
- தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா நடந்தது.
- மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா, லாசுப்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுவை கலை, பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். தமிழ் வளர்ச்சி சிறக சிறப்பு பணி அலுவலர் வாசுகி, உறுப்பினர்கள் புலவர் வெங்கடேசன், வேல்முருகன், பேராசிரியர் இளங்கோ, சிறுகதை படைப்பாளர் எழுத்தாளர் பூபதி பெரியசாமி, சுந்தர முருகன், ஆரோக்கிய நாதன், முருகையன், தமிழ் ஆர்வலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.