புதுச்சேரி
காகிதம் இல்லா சட்டசபை பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
- காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
மத்திய அரசின் இவிதான் செயலி திட்டத்தின் மூலம் புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏக்கள் ரமேஷ், அங்காளன், ரிச்சர்டு, அரசு செயலர் மணிகண்டன், சட்டசபை செயலர் தயாளன், தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், தேசிய தகவல் மைய அதிகாரி கோபி சுவாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என சபநாயகர் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.