புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைதி பேரணியை தொடங்கி வைத்த காட்சி.  

பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி

Published On 2023-11-01 09:19 GMT   |   Update On 2023-11-01 09:19 GMT
  • நேரு வீதி மிஷின் வீதி ,வழியாக சென்று காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளியில் நிறைவு பெற்றது.
  • அமைதி பேரணியில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

புதுச்சேரி:

உலக அமைதியை வலியுறுத்தி பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் அமைதி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடி அசைத்து அமைதி புறாக்களை பறக்க விட்டு தொடங்கி வைத்தார். அமைதி பேரணி உப்பளம் பெத்திசெமினார் பள்ளியில் தொடங்கி அண்ணா சாலை ,நேரு வீதி மிஷின் வீதி ,வழியாக சென்று காந்தி வீதியில் உள்ள பெத்திசெமினார் பள்ளியில் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ, முன்னாள்

எம்.எல்.ஏ. அன்பழகன், புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட கல்வி செயலர் பீட்டர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் தேவதாஸ், துணை முதல்வர் ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைதி பேரணியில் இஸ்ரேல்- பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டது. 

Tags:    

Similar News