புதுச்சேரி

புதுவை-கடலூர் ரோடு மரப்பாலம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

புதுவை-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் பொதுமக்கள்

Published On 2023-11-07 08:24 GMT   |   Update On 2023-11-07 08:24 GMT
  • மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.
  • போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

புதுச்சேரி:

கடற்கரை நகரமான புதுவை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புதுவை கடற்கரையின் அழகை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

 சுண்ணம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இதனால் புதுவையின் முக்கிய சாலையான முதலியார் பேட்டை, மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

குறிப்பாக மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.இதனால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

ேமலும் புதுவை நகர பகுதிகளிலும் இதே நிலையே உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளி ஊர்களில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ஏராளமானோர் வருவதால் புதுவை நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

கனரக வாகனங்களை பிரித்து மாற்றுப் பாதையில் அனுப்பினால் புதுவையில் நிலவு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்

மேலும் முக்கிய சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காணலாம் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News