புதுச்சேரி

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட காட்சி.

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு

Published On 2023-11-26 06:50 GMT   |   Update On 2023-11-26 06:50 GMT
  • பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

புதுச்சேரி:

பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேரடியாக பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 107-வது பகுதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து கேந்திரங்கள் மற்றும் கிளைகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதுபோல் முதலியார்பேட்டை கேந்திர பொறுப்பாளரும், உப்பளம் தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் ஏற்பாட்டில், மூத்த நிர்வாகி சந்திரசேகரன் தலைமையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கிளைத் தலைவர்கள் மணிகண்டன், பலராமன், முனியப்பன் ஆகியோர் முன்னிலையில் முதலியார் பேட்டை-கடலூர் சந்திப்பில் உள்ள ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருணாகரன், ஹரிதாஸ், அசோக்குமார், கார்த்திக், மோகன் புகழேந்தி, ஆனந்தன், சந்தோஷ், பழனி, முருகன் , ராஜி, செல்வம் மணி மகேஷ், கிஷோர், பிரஜித், ஈஸ்வர், மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News