புதுச்சேரி

ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் ரோக. அருள்தாஸ் பேசிய காட்சி.

காலி பணியிடங்களை நிரப்பாததை கண்டித்து போராட்டம்

Published On 2023-08-14 09:25 GMT   |   Update On 2023-08-14 09:25 GMT
  • மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
  • துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஒருங்கிணைந்த ஆதி திராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

மாநில அளவிலான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச்செயலாளர் கலைமணி, பேரவை தலைவர் முருகையன், கவுரவத் தலைவர் திருமால், நகரத்தலைவர் ஆதிகேசவன், முதன்மை செயலாளர் பாலக்கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் ராம்விலாஸ் பஸ்வான், ஒருங்கிணைப்பா ளர் மகேந்திரவேலன், பொருளாளர் வேல்முருகன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன் மற்றும் மாணவர் அணி தலைவர், இளைஞர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலா ளர் பரமசிவம், அமைப்பாளர் சுப்ரமணி, மாநில செயலாளர் ரகோத்த மன், நகர செயலாளர் முனியன், துணை செயலாளர் அருணாசலம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் நலத்துறை யில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், நல அதிகாரி, நல ஆய்வாளர், உதவியாளர், பல்நோக்கு ஊழியர் போன்ற பதவிகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சிறப்பு கூறு நிதியிலிருந்து 22 துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை எனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News