புதுச்சேரி

கோப்பு படம்.

null

காலாப்பட்டு ஜெயிலில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா

Published On 2023-11-02 04:41 GMT   |   Update On 2023-11-02 05:09 GMT
  • புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் கைதிகள் அமைத்த சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.

தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், பட்டேல் சாதனைகளை எடுத்துக்கூறினார்.

கைதிகள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி சூப்பிரண்டு கபிலன், அமிழ்தன் செய்திருந்தனர்.


Tags:    

Similar News