புதுச்சேரி
null
செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பியது
- மீன்களை பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த இளைஞர்கள்
- படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கனமழையால் செட்டிபட்டு படுகை அணை நிரம்பி வழிகிறது. படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
இதனை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செட்டிபட்டு படுகை அணையில் மீன்களை பிடித்தும் செல்பி எடுத்தும், ஆனந்த குளியல் போட்டு உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.