பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக அமைப்பினர்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.
போராட்டத்துக்கு லோகுஅய்யப்பன் தலைமை வகித்தார். மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், திராவிடர் கழகம் சிவவீரமணி, வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், பெரியார்சிந்தனையாளர் இயக்கம் தீனா, அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ராவணன் படிப்பகம் அபிமன்னன், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தேசிய இளைஞர் முன்னணி கலைபிரியன், பீ போல்ட் பஷீர்அகமது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பிராங்களின், தமிழ் எழுத்தாளர் சங்கம் புதுவை தமிழ்நெஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தையொட்டி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தின் நுழைவுவாயிலை ஊழியர்கள் பூட்டினர். இதையடுத்து பொதுப்பணித்துறை நுழைவுவாயிலை முற்றுகையிட்டு சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். நிலத்தடி நீருக்கு ஆதாரமான வேல்ராம்பட்டு ஏரியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பொதுப்ப ணித்துறை பொறியா ளர்களை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.