புதுச்சேரி

ஜிப்மர் டாக்டர், மனைவி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

Published On 2023-07-18 03:48 GMT   |   Update On 2023-07-18 03:48 GMT
  • மர்மநபர் டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார்.
  • அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புதுச்சேரி:

புதுச்சேரி கோலாஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடரமண்யா (வயது36). டாக்டரான இவர், ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.

அவரது டுவிட்டர் கணக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகம் ஆனார்.

அப்போது அந்த நபர், டாக்டர் வெங்கடரமண்யாவிடம் அவரது பாஸ்போர்ட், முகவரி உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், டுவிட்டரில் இருந்த வெங்கடரமண்யா மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்களை எடுத்து ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடரமண்யா இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் வெங்கடரமண்யாவுக்கு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News