புதுச்சேரி
பட்டியில் அடைத்து வைத்திருந்த 25 ஆடுகள் திருட்டு
- ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார்.
- ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் வசந்த் நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் ரங்கராஜ். இவரது மகன் சரண்ராஜ் (வயது 28). இவர் ஊசுட்டேரி கன்னியகோவில் பின்புறம் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஆடு, கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி யன்று காலை சரண்ராஜ் பட்டிக்கு சென்றார்.
அப்போது பட்டியில் அடைத்து வைத்திருந்த 100 ஆடுகளில் 25 ஆடுகள் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சரண்ராஜ் ஆடுகள் திருடுபோனது குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.