புதுச்சேரி

அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் பெரிய வாய்க்கால் குடியிருப்போர் மனு அளித்த காட்சி.

பெரிய வாய்க்கால் குடியிருப்புக்கு செல்ல அகலமான சாலை வசதி

Published On 2023-11-26 04:55 GMT   |   Update On 2023-11-26 04:55 GMT
  • அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் மனு
  • இதுவரை சரியான பாதை வசதி இல்லை

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் வாணரப்பேட்டை பகுதி மக்கள் சட்டசபையில் அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

உப்பளம் வாணரப்பேட்டை, தாவீதுபேட்டை, பெரிய வாய்க்கால் ஓரத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடு களுக்கு வாணரப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து சென்று வர இதுவரை சரியான பாதை வசதி இல்லை. அவரவர் வீடுகளுக்கு எதிரே உள்ள சுமார் 3 அடி அகலம் உள்ள பாதையில் மட்டும் சென்று வருகின்றனர்.

அந்த பாதையில் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத சூழல் உள்ளது. பெரிய வாய்க்காலை அரசு புனரமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருவதால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு அகலமான சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று பார்வையிட்டு உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News