புதுச்சேரி

விபத்தை ஏற்படுத்திய கார்.

காரைக்காலில் கார் மோதி இளம் பெண் பலி: 4 பேர் படுகாயம்

Published On 2023-11-04 07:30 GMT   |   Update On 2023-11-04 07:30 GMT
  • மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.
  • அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் நேரு நகர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், ஹோம்கார்டு பயிற்சி எடுத்து வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி யானார். மேலும் 4 பேர் காயம் காயம் அடைந்தது குறித்து, காரைக்கால் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் நித்தீஸ்வ ரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வரசி (வயது 23).இவர் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் நேரு நகர் அருகே உள்ள பாரதியார் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பூவத்தை சேர்ந்த சண்முக வேல் (61), மற்றொரு மோட்டார் சைக்கி ளில் சென்ற மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த எழிலன் (26) ஆகியோர் மீது மோதி சைக்கிளில் சென்ற செல்வரசி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் செல்வ ரசி சாலையில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் சண்முகவேல், எழிலன் மற்றும் காரில் சென்ற, மயிலாடுதுறை மாவட்டம் ஆயர்பாடியை சேர்ந்த ஜெகபர் அலி (73), காரை ஓட்டிய திருக்களாச் சேரியை சேர்ந்த முபாரக் அலி (48) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் செல்வரசி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்கு வரத்து போலீசார் முபாரக் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News