search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடனை அடைக்கும் எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.
    • இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.

    நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது.

    கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும்.

    அந்த எண்ணம் வர நாம் விநாயகரை வணங்க வேண்டும்.

    இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.

    வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரிடம்,

    "ஓம் கணேசாய ருணம்

    சிந்தி வரேண்யம்

    ஹ§ம் நம்; பட்ஸ்வாஹா" என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

    "ஓம் க்லௌம் க்ரோம்

    கணேசாய ருணம் சிந்தி

    வரேண்யம் ஹ§ம் நம், பட் ஸ்வாஹா" என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.

    சனிக்கிழமைகளில் சதுர்த்தி வரும் நாளில் முதலில் கடன் கொடுக்க வேண்டிய தொகையில் இருந்து சிறிதளவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கடன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் முழுவதும் விரைவில் தீர்ந்து விடும்.

    மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

    அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடன் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

    • விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
    • தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.

    தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர்.

    அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

    சகோதர ஒற்றுமை உண்டாகும்

    சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன், சகோதரி மீது இருக்கும் பாசம், பெரியவர்களான பிறகு மாறிவிடுகிறது.

    நாரதர் கொடுத்த பழத்திற்காக, உலகைச் சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர்.

    இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.

    • அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
    • அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.

    அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.

    அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும். ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்.

    சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.

    ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

    புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.

    ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.

    புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

    ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.

    சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.

    இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

    எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாகும்.

    வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளை செய்யலாம்.

    அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.

    திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

    ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்.

    துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

    பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படையல்

    வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மற்ற விநாயகரின் உருவத்திலிருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.

    குடைவரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.

    இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.

    கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.

    உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.

    இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது. தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.

    • ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.
    • ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.

    வீடுகளில் பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக்கூடிய மந்திரம் இது.

    பூஜையை முடிக்கும் போது சொல்லப்படுகின்ற மந்திரமான,

    "யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான்

    பசுமான் பவதி சந்திரமா வா அபாம் புஷ்பம்

    புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி

    ய ஏவம் வேத யோபாம் மாயதனம் வேத

    ஆயதனவான் பவதி"

    என்று சொல்லிக் கொண்டே மலர்களை போட்டு பூஜையை நிறைவு செய்வது நல்லது.

    மலர் யாகம், மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியோ, புஷ்பயாகமோ செய்யப்படுகின்ற போது இறைவன் அகமகிழ்ந்து வேண்டிய வரம் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை.

    ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறையாவது இவ்வாறு புஷ்ப யாகங்கள் செய்யப்படுவது உண்டு.

    ஆண்டு முழுவதும், ஒரு நாள் தவறாமல் இறைவனுக்கு புஷ்பம் கிடைத்துவிடும் என்பது மிகப் பெரிய விஷயம்.

    சில நாட்களில் பற்றாக்குறையாகி விடும். சில நாட்களில் கிடைத்தும் திருப்தியாக இருக்காது.

    இது போன்ற குறைகள் நீங்குவதற்காக புஷ்ப யாகங்கள் செய்யப்படுகின்றன.

    அந்த சமயங்களில் உயர் ரக மலர்களைக் கொண்டு, ஆசார அனுஷ்டானமான வேத விற்பன்னர்களைக் கொண்டு, முதலில் மந்திரங்களைக் கொண்டு மலர்கள் அக்னிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் இறைவனது திருவடி தொடங்கி, திருமுடி வரை மலர்கள் சொரியப்படும். இது திருப்பதியில் மிக விசேஷம்.

    என்றாலும், இப்போது ஏராளமான ஆலயங்களில் பக்தர்களின் புஷ்ப கைங்கர்யத்தால் மிகச் சிறப்பாகவே புஷ்ப யாகங்கள் நடைபெறுகின்றன.

    தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    தெய்வங்களுக்கு செய்யும் பூஜையில் சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும்.

    அப்போது ரோஜாப்பூ சாமந்திப்பூ போன்ற பூக்களின் இதழ்களையே சிறிது சிறிதாக பிய்த்து அர்ச்சனை செய்யலாமே என்று தோன்றும்.

    ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது.

    தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அர்ச்சனை மந்திரங்கள் நிறைய பாக்கி இருந்து, அர்ச்சனை செய்ய பூக்கள் குறைவாக இருக்கும் போது கூட, முழுமையான ஒரே ஒரு பூவை கையில் வைத்துக் கொண்டு, பாக்கியுள்ள அனைத்து மந்திரங்களையும் சொல்லிவிட்டு, இறுதியில் அந்த ஒரே ஒரு பூவை தெய்வங்களின் பாதங்களில் சேர்த்து விடலாம்.

    இப்படி செய்வதால் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒவ்வொரு பூவைப் பாட்டு அர்ச்சனை செய்த பலன் முழுமையாகக் கிடைக்கும்.

    • தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.
    • எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

    சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணை ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

    ஆனால், "தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணை ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

    அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், "தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

    எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணை தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

    அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

    நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள்.

    தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.

    எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

    இந்த 2 மணி நேரத்தில் தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் எல்லா சடங்குகளையும் நிறைவு செய்வது நல்லது.

    தீபாவளி விரதம், கேதார கவுரி விரதம் எடுக்க சிலர் நல்ல நேரம் பார்ப்பார்கள். மேஷ மற்றும் மிதுன லக்னத்திலும் தீபாவளி விரதம், கோதர கவுரி விரதத்தை தொடங்கலாம்.

    • திருப்பதி ஏழுமலையான் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்.
    • அங்கு சாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும்.

    திருப்பதி ஏழுமலையான் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறார்.

    அதற்காக தீபாவளிக்கு முதல் நாள் பக்தர்களின் எண்ணைக் குளியலுக்கு வேண்டிய நல்ல எண்ணை, தேவ ஸ்தானத்தால் இலவசமாக அளிக்கப்படுகிறது.

    தீபாவளிக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு, நான்கு மாட வீதிகள் வழியாக கோவில் அர்ச்சகர்கள் பெரிய "கேன்"களில் நல்லெண்ணையைக் கொண்டு வருவார்கள்.

    சுமார் 50 ஆயிரம் பக்தர்களுக்கு நல்லெண்ணை வழங்கப்படுகிறது.

    வாங்காதவர்கள், தேவஸ்தான அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். இந்த எண்ணையை பக்தர்கள் தீபாவளி அன்று விடியற்காலை பூஜித்து தலையிலும் உடலிலும் தேய்த்து நீராடுவார்கள்.

    பக்தர்களுக்கு மட்டுமல்ல... கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் இந்த நல்லெண்ணை பிரசாரம் வழங்கப்படுகிறது.

    தீபாவளி அன்று காலை... 7 மணி முதல் 9 மணி வரை, "கோவில் தங்க வாசல்" முன்பு உற்சவ மூர்த்தி ஸ்ரீமலையப்ப சாமி, வைரமுடியுடன், தங்க&வைர நகைகள், பட்டுப்பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீதேவி & பூதேவியுடன் எழுந்தருள்வார்.

    அங்கு சாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும்.

    திருமஞ்சன சேவை முடிந்ததும், மீண்டும் சாமிக்கு அலங்கார & ஆராதனைகள் நடைபெறும். அப்போது லட்டு, ஜிலேபி போன்ற பலகாரங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இரவு ஏழு மணிக்கு ஸ்ரீதேவி & பூதேவியுடன் மலையப்ப சாமி, மாட வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள் புரிவார்.

    சாமி ஊர்வலத்துக்கு முன் மத்தாப்பூ, வண்ண வண்ண பூத்திரி ஆகியவற்றைக் கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடுவர். முன்பெல்லாம் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

    இப்போது, திருமலையில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளதால், மத்தாப்பூ கொளுத்தி சாமியுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாளை அன்று தரிசிக்க, வாழ்வில் வசந்தம் வீசும்.

    • பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான்.
    • பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.

    * வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலியை காலால் பூமியில் அழுத்திய நாள் தீபாவளி என்று சொல்கிறார்கள்.

    * வனவாசம் முடிந்து ஸ்ரீராமபிரான் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளித் திருநாளாகச் சொல்வோரும் உண்டு.

    * பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் தோன்றியதும் அவளை, திருமால் மணந்து கொண்டதும் தீபாவளித் திருநாளில்தான்.

    * பகீரதன் தவம் செய்து கங்கையை வரவழைத்த திருநாளாக தீபாவளியைப் போற்றும் கதைகளும் உண்டு.

    * சிவபெருமான், தன் மேனியின் இடபாகத்தை பார்வதி தேவிக்கு அளித்து, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த திருநாள் & தீபாவளி என்போரும் உண்டு.

    * தமிழகத்தில் சோழர்களது காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை. மதுரை & திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் தமிழகத்தில் தீபாவளித் திருநாள் அறிமுகமானது.

    * சிங்கப்பூரிலுள்ள மாரியம்மன் கோவிலில் தீபாவளியன்று பூக்குழித் திருவிழா நடைபெறும்.

    * நரகாசுரனின் மகனான பகதத்தனே, தீபாவளியை முதன் முதலாகக் கொண்டாடியவன்.

    * ஒரு தீபாவளித் திருநாளில்தான் ஆதிசங்கரர் ஞான பீடத்தை நிறுவினார்.

    * பிரகலாதனின் பேரன் மகாபலி அரியணை ஏறியது இந்த நாளில்தான். சந்திரகுப்த விக்ரமாதித்தன் அரியணையில் அமர்ந்ததும் இந்தத் திருநாளில்தான்.

    * சீக்கிய மதகுரு குருநானக், தீபாவளியன்றுதான் அமரரானார். ஆரிய சமாஜத்தின் நிறுவனர் தயானந்த சரஸ்வதி அமரர் ஆனதும் இந்த நாளில்தான்.

    • திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,
    • அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.

    எடுத்த பின் மலர்ந்த மலர், பழம் மலர், எருக்கு இலையிலும் ஆமணக்கு இலையிலும் கட்டி வைத்த மலர்கள், கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த மலர்கள், உதிர்ந்து கீழே விழுந்த மலர்கள், கீழே உதிர்ந்த மலர்கள், இடைக்குக் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட மலர்கள், இரவில் பறித்த மலர்கள், புழுக்கடி மலர்கள், நீரில் மூழ்கிய மலர்கள், அசுத்தரால் எடுக்கப்பெற்ற மலர்கள், தலைமுடி பட்ட மலர்கள், பறவைகளின் எச்சம் பட்ட மலர்கள், சிலந்தி அணில், பல பூச்சி எச்சில் பட்ட மலர்கள், காகித மலர்கள், வாசனை இல்லாத மலர்கள், இவைகள் பூஜைக்குப் பயன்படாத மலர்கள் ஆகும்.

    விநாயகருக்கு & துளசியும்,

    சிவனுக்கு & தாழம் பூவும்,

    துர்க்கைக்கு & அருகம்புல்லும்,

    சூரியனுக்கு & வில்வமும்,

    திருமாலுக்கு & நந்தியாவட்டமும்,

    அம்பிகைக்கு & நெல்லியும் பயன்படாத மலர்கள் ஆகும்.

    • நீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலரும் நீரில் மிதக்கும்.
    • கல்வியும் அவ்விதமே தான்.

    குளம் வற்றி பறவைகள் வேறிடம் தேடிச் சென்று விட்டாலும் அல்லி மலர்கள், தாமரை மலர்கள் மட்டும் அந்தக் குளத்திலேயே இருக்கும்...

    இருபது வருடம் ஆனாலும், காய்ந்து கருகிப் போனாலும் அங்கேயே கிடக்கும்.

    மீண்டும் தண்ணீர் வரும் போது காய்ந்து கருகிக்கிடக்கும் அந்தக் கொடிகள் மீண்டும் பொலிவுடன் எழுந்து நின்று பூக்களைத் தரும்.

    நீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலரும் நீரில் மிதக்கும்.

    கல்வியும் அவ்விதமே தான்.

    அழியாமல் நம்மிடம் என்றும் நிலைத்து நிற்கும்.

    அதனால்தான் கல்விக்கு அதிபதியான சரசுவதி தாமரை மலரில் அமர்ந்து இருக்கிறாள்.

    • வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.
    • மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.

    1. செந்தாமரை மலர் - நல்ல தனத்தையும், வியாபார விருத்தியையும், ஆத்ம பலத்தையும், தந்தைக்கு ஆயுள் விருத்தியையும் கொடுக்கும்.

    2. வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.

    3. மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.

    4. பாரிசாதம், அல்லிப்பூ மங்கிய வெள்ளைப் பூக்கள் - சிறந்த பக்தியையும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும், தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும்.

    • இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
    • இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன! இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேவர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    ×