search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள்
    • இந்தியாவில் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர்.

    இந்தியாவில் கார் வாங்குபவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது.

    அதே போல் இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் கார் வாங்குபவர்களின் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர். 12% பேர் டீசல் கார்களையும் 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விரும்புகின்றனர் என்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கொண்ட கார்களையே அதிகமானோர் வாங்க விரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும்.
    • நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.

    பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மதம் சார்ந்த நிகழ்ச்சியில் பிரதமரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து கொண்டதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில், நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஹிமா கோலி அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மத நிகழ்வுகளில் நீதிபதிகள் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இறை நம்பிக்கையும், ஆன்மிகமும் மதத்தில் இருந்து வேறுபட்டவை. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அது 4 சுவர்களுக்குள்தான் இருக்க வேண்டும். நீதித்துறைக்கு வந்த பிறகு அரசியல் சாசனம்தான் மதம்.

    மதச்சார்பற்ற இறையாண்மை கூடிய ஜனநாயகத்தைதான் அது முன்னிறுத்துகிறது. அதைதான் நாம் பொதுவெளியில் பிரதிபலிக்க வேண்டும். நீதிபதியின் தனிப்பட்ட மத நம்பிக்கை, அவர் நீதி வழங்குதலில் குறுக்கிடலாம் என்ற அச்சம் மக்களிடம் வந்துவிடக்கூடாது" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
    • மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.

    புதுடெல்லி:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை சமீபகாலம்வரை அமலில் இருந்தன.

    அந்த சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நியாய சன்ஹிதா (பாரதீய நீதி சட்டம்), பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்), பாரதீய சாக்ஷ்யா ஆக்ட் (பாரதீய சாட்சியங்கள் சட்டம்) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது.

    இதுதொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நிலைக்குழு ஆய்வுக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.

    3 சட்டங்களும் கடந்த ஜூலை 1-ந்தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அந்த சட்டங்களை எதிர்த்து சில எதிர்க்கட்சிகளும், வக்கீல்களும் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.

    அதன்படி, பாரதீய நியாய சன்ஹிதா அமலுக்கு வந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து கடந்த 3-ந்தேதிவரை அச்சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 5 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இச்சட்டங்களை சுமுகமாக அமல்படுத்துவதற்காக இ-சாக்ஷ்யா உள்பட பல்வேறு செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    இ-சாக்ஷ்யா செயலி, ஆதாரங்களை பதிவு செய்யவும், சேமித்து வைக்கவும் பயன்படுகிறது. அதை 22 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

    புதிய குற்றவியல் சட்டங்களை படித்து பார்க்க 'என்சிஆர்பி சங்களன்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரம் தடவை அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தனிநபர்களுக்கு அளிப்பதற்காக கோர்ட்டில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு மின்னணு முறையில் சம்மன் அனுப்ப 'இ-சம்மன்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    • கிரீமி லேயரின் வருமான வரம்பு ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும்
    • வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

    அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி அரியானா சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அரியானாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் பாஜகவும் நாற்காலியை கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும் தனியாக களமிறங்கியுள்ள நிலையில் கடுமையான போட்டியாக மாறி உள்ளது.

    இந்தநிலையில் மக்களைக் கவரும் அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன் உள்ளிட்டோர் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ.2000, விவசாயிகளின் கோரிக்கை விடுத்திருந்தபடி, பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம், சாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்துவது, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட 7வாக்குறுதிகளைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இந்த முக்கிய உத்தரவாதங்களைத் தவிர, கட்சியின் 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து சண்டிகரில் விரிவாக விளக்கப்படும் என்று கார்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    • டெல்லி கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
    • ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.

    டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.

    டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பர் 21-ம் தேதி என முன்மொழிந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • விபத்தில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டெல்லி கரோல் பாக்கில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிநத் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காலை 9.11 மணிக்கு தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

    இதுவரை குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    • சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.
    • வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான்-4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்கும் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பி வரவுள்ளது.

    சந்திரயான் 3 விண்கலம் நிலவிலேயே இருக்கும் நிலையில், சந்திரயான் 4 திட்டத்தின் கீழ் விண்கலம் நிலவில் தரையிறங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.

    இந்த விண்கலம் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வந்து பூமியில் அது குறித்து ஆராய்ச்சி நடைபெற உள்ளது.

    2040க்குள் இந்த விண்கலத்தை பூமியில் தரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ரூ.20,193 கோடி செலவில் திட்டம் ககன்யான் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

    • நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதீய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தொலைத் தொடர்புத் துறை அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் நேர்மறையான ஆதரவையே வழங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது
    • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து வந்தது.

    தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர்
    • ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுவதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை.

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மிரட்டல் விடுப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் பொது செயலாளரான அஜய் மக்கான் துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மக்கான் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அஜய் மக்கான் கூறுகையில் "மறைந்த இந்திரா காந்தி, மறைந்த ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களது உயிரை நாட்டிற்கு தியாகம் செய்தனர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு பிறகும் கூட இதுபோன்ற மிரட்டலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பாஜக தலைவர்கள் மட்டுமல்ல. ஏராளமான தலைவர்கள் இதுபோன்ற மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராகுல் காந்தி எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. பற்றி பேசுகிறார். பழங்குடியினர் மற்றும் மைனாரிட்டி மக்களை பற்றி பேசுகிறார். இது பாஜக-வினருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இந்த காங்கிரஸ்ட் கட்சி. நாங்கள் பயப்படமாட்டோம். பணிந்து செல்லமாட்டோம் என்பதை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

    "நீங்கள் நன்றாக நடந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் பாட்டிக்கு (இந்திராகாந்தி) நடந்ததை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என கடந்த செப்டம்பர் 11-ந்தேதி மார்வாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்கியில் பகிரங்க சவால் விடப்பட்டது.

    ஏக்நாத ஷிண்டே சிவசேனா கட்சி எம்எல்ஏ கெய்க்வாட் "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாக்கை துண்டிப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என அறிவித்திருந்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ரவ்னீத் பிட்டு, "மக்களவை எதிர்க்கட்சி தலைவர் நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என குற்றம்சாட்டியிருந்தார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் நாடு முழுவதும் அமைதியை சீர்குலைப்பது, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர்கள் பேச்சு இருப்பதாக அந்த புகாரில் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

    • லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார்.
    • அந்த காலக்கட்டத்தில் வேலைக்குப்பதிலாக நிலங்களை குறைந்த விலையில் பெற்றதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இவரது மகன் தேஜஸ்வி யாதவ். இவர் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் ஆவார்.

    இவர்கள் இருவர் உள்பட பலர் வேலைக்காகச நிலங்கள் பெற்றது தொடர்பான பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

    நீதிமன்ற சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அக்டோபர் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 6-ந்தேதி தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

    லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே துறை மந்திரியாக இருந்தார். அப்போது மேற்கு மத்திய மண்டலம் ரெயில்வேயின் மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் குரூப்-டி நியமனம் உருவாக்கப்பட்டபோது, வேலைக்கு பதிலாக நிலங்களை விண்ணப்பத்திவர்களிடம் இருந்து லாலு பிரசாத் குடும்பம் அல்லது கூட்டாளிகள் குறைந்த விலைக்கு பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

    • டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
    • கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.

    டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.

    இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.

    இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.

    ×